அதிரையின் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் மர்ம விஷமிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் அதிரை நகர காங்கிரஸ் துணை தலைவர் சாமி நாரயண சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக வாழும் பெருமைக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டான ஊர் அதிராம்பட்டினம். இங்கு அதிகமான முஸ்லீம்களும் இந்துக்களும் இனக்கமாக வாழ்கின்றனர். முஸ்லீம்களுக்கு அதிகமான இந்துகள் நண்பர்களாக,தோழிகளாக, ஆசிரியர்களாக, இருக்கின்றனர். அதேபோல் இந்துக்களுக்கும் இவ்வாறான ஒற்றுமை மிகுந்த அதிரையில், சமீபத்தில் சில சஞ்சலங்கள் மற்றும் சலசலப்புக்கள் ஏற்படுத்திடலாம் என சில தீயசக்திகள் விசம செயல்களால் முகநூல், மற்றும் போஸ்டர் வாயிலாக முற்படுகிறார்கள். இவ்வூர் சமுகநல்லிணக்கத்திற்கு பேர்போன ஊர். எனவே இதனால் இங்கு எள்ளளவும் சலசலப்பை ஏற்படுத்த முடியாது, அவர்கள் எண்ணியது நடக்காது இனியும் அறவே நடக்காது. நம் அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை நமக்கான பலம். நமதூரின் மகத்துவம்” என தனது அறிக்கையில் சாமி நாரயண சாமி குறிப்பிட்டுள்ளார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





