Monday, December 15, 2025

அதிரை திமுக உட்கட்சி பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயல்வதை தடுத்திடுக! தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகர SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அமைதி பூங்காவான அதிரையில் உட்கட்சி அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயலும் ஆளுங்கட்சியனரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிரை திராவிட முன்னேற்ற கழகத்தில் நகரச் செயலாளர் இராம.குணசேகரன் – முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் ஆகியோரிடையே கடந்த சில காலங்களாக நடந்து வரும் பிரச்சினையை சிலர் மதரீதியான பிரச்சினையாக மடைமாற்றம் செய்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.

அதிரை எப்போதும் போல அமைதியாகவே இருந்து வருகிறது. அதிரை மக்கள் விஷமிகளின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் இடம் தரமாட்டார்கள்.

உட்கட்சி அரசியல் பிரச்சினையை மடைமாற்ற செய்து மதப்பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என அதிரை SDPI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img