Sunday, February 1, 2026

அதிரையில் மத பிரச்சனையை உருவாக்க முயலும் விஷமிகளை கைது செய்க -முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகரில் அனைத்து தரப்பு மக்களும் மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில விஷமிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய வகையில் பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி போஸ்டர்களை அதிரை நகரில் ஒட்டியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் சூழலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மணிச்சுடர் சாகுல் ஹமீதும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், அதிரையில் மதவாத சக்திகள் ஒரு போதும் கால் பதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிரை மக்கள் அனைவரும் ஒற்றுமையை மட்டுமே விரும்புவதாக சுட்டிக் காட்டியிருக்கும் சாகுல் ஹமீது, பொதுமக்களின் பெயரை பயன்படுத்தி விஷம பிரச்சாரத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img