Thursday, March 19, 2026

கப்படிக்கும் கடைத்தெரு குப்பை – கண்டு கொள்ளுமா அதிரை நகராட்சி ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பெரிய கடை தெருவில் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்,காய்க்னி,மாமிச கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றது

வக்பு நிலமான அவ்விடத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு தக்வா பள்ளி நிர்வாகம் மாதாந்திர வரியை தனியாக செலுத்தி வந்தன.

ஆனால் அன்றாடம் சேகாரமாகும் குப்பைகளை அகற்றிய நிர்வாகம், கோழி,ஆட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லை
என கூறப்படுகிறது.

இதனால் சுற்றி திரியும் தெரு நாய்களும் பறவைகளும் குப்பையை கிளறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியாகவும்,வணக்க ஸ்தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியைக் கடக்கும் ஒவ்வொருவரும் மூக்கை பிடித்து நடக்க நேரிடுகிறது.

நகராட்சி நிர்வாகம் ஆடு,கோழி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,பேரூராட்சி நிர்வாகமாக இருந்த கட்டத்தில் சிறப்பாக குப்பைகளை அகற்றினார்கள் என்றும், நகராட்சி நிர்வாகமோ மெத்தனம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img