Sunday, February 1, 2026

அதிரையில் ஆபத்தான மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவம் – நூலிழையில் ஒருவர் உயிர் தப்பினார் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ECR சாலையில் .இரு சக்கர வாகனத்தின் மீது அறுந்து விழுந்த மின் கம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி அலுவலகம் எதிரே செல்லும் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக செல்கிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று திடீரென அறுந்து விழுந்துள்ளது.

அப்பொழுது அவ்வழியாக சென்ற இரு சக்கரம் வாகனத்தின் மீது விழுந்துள்ளது இதனால் பதற்றமடைந்த வாகன ஓட்டி பைக்கை விட்டு விட்டு தப்பியோடியானர்.

இதனால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது.

அவ்வ்போது அறுந்து விழும் மின் கம்பியால்,மக்கள் அச்சமுடன் கடக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img