Sunday, February 1, 2026

ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !

spot_imgspot_imgspot_imgspot_img

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு ‘அஞ்சுமன் மஸ்ஜித்தின்’ நிர்வாகக் குழுவின் மனுவை இன்று விசாரித்தது ஏற்றனர்.

இன்றைய விசாரணையின் முடிவில், ஞானவாபி மசூதில் முஸ்லிம்கள் எந்த தடையுமின்றி தொழுகை நடத்தலாம் எனவும் லிங்கம் கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஞானவாபி மசூதி வளாகத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் மனுதாரரான இந்து பெண்களுக்கு, கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஞானவாபி மசூதிக் குழுவின் மனு மீதான விசாரணை அடுத்ததாக, வரும் 19ம் தேதி தொடரும் என்று ஒத்தி வைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img