Saturday, September 13, 2025

சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் வெடித்த ஹிஜாப் தடை விவகாரம் – கூட்டத்தில் சுமூக முடிவு!

spot_imgspot_imgspot_imgspot_img

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மனைவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை இல்லாத நிலையில், அரசுப் பள்ளிக்கு மாணவி ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என தலைமை ஆசிரியை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமாத்தார்களுடன் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டி கருத்து கேட்கப்பட்டது.

அதில், இஸ்லாமிய மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள் அதற்கு தடை தெரிவிக்க கூடாது என அப்பகுதி ஜமாத்தார்கள் தரப்பில் கூறினர். அவர்கள் கருத்துகளை கேட்டறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், “உங்கள் பிள்ளைகள் ‘ஹிஜாப்’ அணிந்து பள்ளிக்கு வரலாம், அதற்கு யாரும் தடை விதிக்க மாட்டார்கள். அதேபோல தலைமை ஆசிரியையிடம் பேசியதை தெரியாமல் வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டதும் தவறு” என மாணவியின் பெற்றோரிடமும், ஜமாத்தார்களிடமும் தெரிவித்தார்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியையிடம் இதுபோன்ற பிரச்னை எழுந்தால் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img