அதிரையில் யாசகம் கேட்டு வரும் சில பெண்கள் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வருகின்றனர். இதனிடையே ஆஸ்பத்திரி தெருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அப்போது குடிக்க தண்ணீர் தருமாறு கேட்ட அந்த பெண், உரிமையாளர் தண்ணீர் எடுக்க சென்ற சில நிமிட இடைவெளியில் அங்கிருந்த பணப்பையை திருடியதாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்துவிட்டு அந்த பெண் சென்ற நிலையில், டேபிலில் இருந்த பணப்பை காணாமால் போனதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே யாசகம் கேட்டு வரும் அறிமுகமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





