Monday, December 1, 2025

அதிரையில் உருகுலைந்த கார்! மாடு பலி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் அங்கும் இங்குமாக திரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி பயணப்பட்ட கார் ஒன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அந்த காரின் முன்பகுதி உருகுலைந்தது. காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். ஆனால் படுகாயமடைந்த மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதனிடையே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் உயிரையும் கால்நடைகளின் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img