Saturday, September 13, 2025

ஏரியல்,சர்ஃப்,ரின் பெயரில் டூப்ளிகேட் சோப்புத்தூள். மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையை அடுத்த செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக துணி துவைக்கும் பவுடர்களும், லிக்யூடுகளும் தயாரித்து விற்று வந்த குடோனுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து மிகவும் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களில் போலியான துணி பவுடர் மற்றும் லிக்யூட்களை தயாரித்து பருப்பு மூட்டைகளில் பேக் செய்து பருப்பு விற்பனை போலவே கள்ளத்தனமாக ஆந்திரம், கேரளா, கர்நாடகா, தமிழகம் என நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் அசல் நிறுவனத்தின் வழக்கறிஞரான பாலசுப்பரமணியத்திற்கு தெரியவரவே, முறைகேடாக நடைபெற்று வந்த குடோன்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு இதற்கு உரிமையாளர் யார் என்று கேட்ட போது அப்பகுதியிலுள்ள லோக்கல் டீலர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்துள்ளார். உரிமையாளரின் பெயர் சொல்ல மறுத்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர்,

அங்கிருந்த சூப்பர்வைசர் ரவி, மேனேஜர் சுரேஷ், வட இந்தியாவைச் சேர்ந்த மெஷின் ஆபரேட்டர்கள் 18 பேரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதே போல, தலைமறைவான மூன்று உரிமையாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 60 லட்சத்திற்கும் மேலான மதிப்புடையப் பொருட்களை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img