அதிரை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் சபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி.பாலசுப்ரமணியம், நகராட்சி தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய MMS.அப்துல் கரீம், அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயனடையும் வகையில் அதிரையில் 24 மணிநேர அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார். இதனிடையே அதிரை தாலுகா அறிவிப்பை விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் நகராட்சி துணை தலைவரும் நகர செயலாளருமான இராம.குணசேகரன் கோரினார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





