Saturday, September 13, 2025

மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் அப்துல் ஜப்பார் என்பவர் சமூக ஊடகங்களில் வாயிலாக பல்வேறு நபர்கள், இயக்கங்கள், பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருபவராவர்.

சமீபத்தில் அரசியல் டைம்ஸ் என்கிற வார இதழின் ஆசிரியரை ஒருமையாகவும், தரக்குறைவாகவும் பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு அந்த இதழின் மூத்த நிரூபர் ஒருவர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இம்மனு மீதான விசாரணையை காவல்துறை முடுக்கியது, இந்த நிலையில் நேற்று அதிரை காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆடியோவில் பேசியமைக்காக தாம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து அப்துல் ஜப்பார் தப்பினார்.

அக் கடிதத்தில் இனிவரும் காலங்களில் நான் யாரையும் மனது புண்படும்படி பேசவோ, எழுதவோ மாட்டேன் என்றும் ஆடியோவில் அவ்வாறு பேசியமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img