கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள் உட்பட 33 பேர் பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் துணை தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி பாராட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதங்களை அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேனிடம் முஸ்லீம் லீக் நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப் ஒப்படைத்தார். அப்போது நகர துணை தலைவர் வழக்கறிஞர் முகம்மது தம்பி, மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, ஐடி விங் பொறுப்பாளர் ஹசன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பாராட்டு கடிதங்கள் விரைவில் நடைபெற இருக்கும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அதிரை எக்ஸ்பிரசிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் பாராட்டு கடிதங்கள் ஒப்படைப்பு!! மிக விரைவில் பரிசளிப்பு!
More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...





