Saturday, September 13, 2025

முத்துப்பேட்டை: ரயில்வேயிக்கு சொந்தமான இடத்தை அடைத்த ரயில்வே நிர்வாகம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை !

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள்,ஐக்கிய ஜமாத்தினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்,அப்போது உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு அந்த பகுதிக்கு செல்ல ஏதுவாக 2அடி மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத அதிகாரிகள் 1.5அடி மடுமே இடைவெளி விட்டு மீதமிருந்த பகுதியை அடைத்து சென்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது ரயில் ஓட்டுநர் பரிந்துரை பேரில் இந்த பாதையை அடைக்க உத்தரவிடப்பட்டது என்றும் இது போன்ற பாதைகளில்தான் அதிகளவில் விபத்துகள் நடப்பதாகவும்,குறிப்பாக கால்நடைகள் அதிகளவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பதாக தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img