Sunday, February 1, 2026

பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மதுக்கூரில் நாளை எஸ்டிபிஐ நடத்தும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினம், பாசிச எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினத்தின் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் M. முஹம்மது ரஹீஸ் தலைமை வகிக்கிறார். விமன் இந்தியா மூமண்ட்(WIM) அமைப்பின் மாநிலச் செயலாளர் தஸ்லீமா ஷெரீப் கண்டன உரையாற்றுகிறார். இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...
spot_imgspot_imgspot_imgspot_img