Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினம் மின் வாரியத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்- திடீர் பரபரப்பில் மின் வாரியம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை 110கி.வா துணை மின் நிலையத்திற்கு கோபுரங்கள் அமைக்க தனியார் விளை நிலங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதற்க்காக இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மேற்கூறிய இடங்களை கையகப்படுத்தி உயரழுத்த மின் கடத்திகளை பொருத்தியுள்ளனர்.

100 சதவீத பணிகள் முடிவடைந்தும், இழப்பீட்டு  தொகையினை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமிலும் அவ்வப்போது மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அதிராம்பட்டினம் 110KV துணை மின் நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் அதிராம்பட்டினம் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரிய இழப்பீட்டு தொகையினை அறிவித்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் முதல்வரின் கவனத்தில் ஈர்க்கும்படியான போராட்டத்தை முன்னொடுப்போம் என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img