Saturday, September 13, 2025

அதிராம்பட்டினம் மின் வாரியத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்- திடீர் பரபரப்பில் மின் வாரியம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை 110கி.வா துணை மின் நிலையத்திற்கு கோபுரங்கள் அமைக்க தனியார் விளை நிலங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.

இதற்க்காக இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மேற்கூறிய இடங்களை கையகப்படுத்தி உயரழுத்த மின் கடத்திகளை பொருத்தியுள்ளனர்.

100 சதவீத பணிகள் முடிவடைந்தும், இழப்பீட்டு  தொகையினை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமிலும் அவ்வப்போது மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அதிராம்பட்டினம் 110KV துணை மின் நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் அதிராம்பட்டினம் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரிய இழப்பீட்டு தொகையினை அறிவித்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் முதல்வரின் கவனத்தில் ஈர்க்கும்படியான போராட்டத்தை முன்னொடுப்போம் என்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img