திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது புதுகாளியம்மன் கோவில். இன்று நடைபெற்ற கோவிலின் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பில் புதுகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஐஸ்மோர் வழங்கப்பட்டது.
இந்து கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் ஐஸ்மோர் வழங்கிய இந்த நிகழ்வு, தமிழ்நாடு என்றைக்குமே மதநல்லிணக்க மண் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.