Tuesday, September 30, 2025

அதிரை 12வது வார்டு பகுதியில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம்..!! கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு 12வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிரையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் தற்பொழுது வாய்க்கால் தெரு பகுதிகளிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கழிவு நீர் கால்வாயில் நீர் திறந்துவிடப்பட்டு வடிகால் சரியான முறையில் அமையப்பெற்றதா என்று சோதனை செய்தனர். அந்த சோதனை ஓட்டத்தில் நீர் சரியான முறையில் அந்த கால்வாயில் ஓடியதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கால்வாயின் மூலம் அப்பகுதியில் மழை நீர் வடிந்து ஓடுவதற்கான ஆதாயம் உள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தது மட்டுமின்றி இந்த பணிகளை துரிதமாக முடிவடைய மேற்பார்வையிட்டு வரும் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா சைபுதீனை பாராட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img