Tuesday, September 30, 2025

குப்பைகளை அள்ளாதே – அதிரை நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு உத்தரவா?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சார ஒயர்களில் உராய்ந்து கொண்டிருந்த மரக்கிளைகள் கம்பங்களுக்கு இடையூறு செய்த மரங்கள் என அதிரையின் பல பகுதிகளிலும் மின் வாரிய ஊழியர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.

இந்த மரக்கிளைகள் எங்கு வெட்டப்பட்டதோ அங்கேயே குவிக்கப்பட்டு கிடக்கின்றது.

குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான கடைத்தெரு பெண்கள் பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு புதுமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்படியே கிடைக்கிறது.

தினமும் வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் அப்புறப்படுத்த கோரினால் சார் இதெல்லாம் நாங்க அள்ள கூடாதாம், நாங்க என்ன சார் பன்னுறது? என கையை விரிக்கிறார்கள்.

காதிர்முகைதீன் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே குவிக்கப்பட்ட மரக்கழிவுகளில் இருந்து விஷ ஜந்துக்கள் நடமாடுவதாக மாணவிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் அதிரை நகரில் கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img