Wednesday, March 18, 2026

நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அதிரையில் தொடர் மழை!

spot_imgspot_imgspot_imgspot_img

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு “ஃபெங்கல்” என பெயரிடப்படும்.

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் டெல்டா கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே கனமழை பதிவாகி வருகிறது.

இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மிதமான மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. காலை ஆரம்பித்த மழை, மாலையை கடந்தும் தொடர்ந்து பெய்து வருகிறது. வரக்கூடிய மணி நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img