Monday, September 29, 2025

தொடரும் தெரு நாய்களின் தொல்லை : அலட்சியத்தில் அதிரை நகராட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய வீதிகளில் கூட்டமாக உலாவித் திரியும் இந்த தெரு நாய்களின் தாக்குதல் தொல்லையால் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள் வெளியே சென்று வர மிகவும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். 

மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் சிறுவர் சிறுமிகளை தெருவில் உலா வரும் நாய்கள் சுற்றி வளைத்து தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து ஒரு சில பொதுமக்கள் பலமுறை நகராட்சிக்கு நேரில் சென்று எடுத்து கூறியும் நகராட்சி நிர்வாகத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் அதிரை, பேரூராட்சியாக இருந்த போது இது போன்ற நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது கண்டறிந்து சரி செய்து வந்த நிலையில், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் இது போன்ற அடிப்படை நடவடிக்கைகளில் அதிரை நகராட்சி மெத்தனப்போக்கை கையாள்வது முகசுளிப்பை ஏற்படுத்துவதாக அதிரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img