Sunday, September 14, 2025

தடா அப்துல் ரஹீம் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் – இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பது..

சமீபத்தில் ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது தமிழக காவல்துறை. ஜனநாயக மாண்புகளை மீறிய தமிழக காவல்துறையின் இந்தச் செயல் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

குண்டர் சட்டத்தை பிரயோகிப்பதற்கான எந்தவித முகாந்திரமோ, அதற்குரிய தகுந்த வழக்குகளோ தடா அப்துல் ரஹீம் மீது இல்லை. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அளவிற்கு அவர் மீது எவ்விதப் புகாரும் இல்லை.

ஒரு ஜனநாயக வழியில் இயங்கி வந்த ஒரு கட்சியின் தலைவரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமீபத்திய வழக்கில் நீதிமன்றம் மூலம் தடா ரஹீமுக்கு பிணை கிடைத்திருந்த நிலையில் போலீசார் அவர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகித்திருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மீது குண்டர் சட்டம் பிரயோகிப்பது என்பது தமிழக அரசுக்கு தேசிய அளவில் அவப் பெயரைத்தான் ஏற்படுத்தும். ஜனநாயக சக்திகளை தமிழக அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறதா என்ற வினாக்கள் எழ இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக அமைந்து விடும். இதுபோன்ற ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நற்பெயரை பெற்றுத் தராது.

ஆகவே, தடா அப்துல் ரஹீம் மீதான குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வரையும், காவல்துறை தலைவரையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
எஸ்.எம். பாக்கர்
தேசிய தலைவர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img