Saturday, September 13, 2025

அதிரை செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும்..! மக்கள் கோரிக்கை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை செட்டியா குளத்தில் நீர் நிரப்ப குழாய் பதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் !

தமிழகரசின் சார்பில் சுமார் 50லட்சம் மதிப்பீட்டில் நடுதெருவில் உள்ள செட்டியா குளம் தூர்வாரப்பட்டு நீர் நிரப்ப தயாராக இருந்தன.

ஆனால் கடந்த முறை அதிரையில் பெய்த கனமழை காரணமாகவும், ஆற்றுநீர் வரத்து அதிகரித்ததின் காரணமாக செட்டியா குளத்திற்கு செக்கடி குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும் நீரை கழிவு நீர் கால்வாய் வழியாக நிரப்பப்பட்டன.

இதனால் சுத்தம் செய்யப்பட்ட அக்குளத்தில் சுகாதாரமற்ற முறையே நீரேற்றப்பட்டன. இதனால் அக்குளத்து நீரை மக்கள் பயன்படுத்த அச்சப்பட்டனர்.

இதனாலேயே குளம்.அருகே குப்பைகளும் அசுத்தமான சூழல் இன்றளவும் நிலவி வருகிறது.

இந்நிலையில் காவிரி ஆற்று நீர் மேட்டூருக்கு வந்த நிலையில், கடைமடை பகுதியின் விவசாய பணிகளுக்கு நீர்விட அரசு முயற்சிகள் செய்து வருகிறது.

விவசாய தேவைக்கு போக மீதமுள்ள நீர் கடலில் கலக்கும் நிலையை போக்க, கடந்த காலங்களில் நமதூர் முன்னாள் சேர்மன் SH.அஸ்லம் தலைமையிலான தன்னார்வலர்கள் அதிரையில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிரப்பும் சேவையை செய்தனர்.

அதேபோன்று நிலை இவ்வருடமும் வரும் பட்சத்தில், நடுத்தெரு செட்டியா குளத்தில் நீர் நிரப்ப வழிகள் ஏதுமின்றி பழையபடி கழிவு நீர் கால்வாய் வழியே நீரேற்றம் செய்ய நேரிடும் இதனால் அக்குளம் மீண்டும் மாசுப்படுத்தப்பட்டு அரசின் பணம்.₹50லட்சம் பயனற்று போகும்.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு அதிராம்பட்டினம் செட்டியா குளத்திற்கு நீர் நிரப்ப சிமெந் குழாய் அமைத்து குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img