அமமுகவிற்கு இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் அமமுக தொழினுட்ப பிரிவு இணைச் செயலாளர் முஹம்மது ஜாவித் வேண்டுகோள் விடுத்துள்ளார். மறைந்த புரட்சிதலைவி அம்மா அவர்கள் இட்டுச்சென்ற பணிகளை சின்னமாவின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் செல்வர் TTV தினகரன் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் அரசு அம்மாவின் கொள்கைக்கு மாற்றமாக பாஷிச பாஜகவின் அடிவருடியாக செயல்படுவதை நன்கறிவோம். அம்மாவின் கொள்கையை காற்றில் பறக்கவிட்ட இவர்களின் கொள்கை பிடிப்பு எவ்வாறு உள்ளது என மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். இளைஞர்கள் போராட்டத்தால்தான் பாரம்பரியமிக்க ஜல்லிகட்டு மீட்கப்பட்டது. அதே ஒரு புரட்சி போராட்டத்தை உங்களின் ஒரே ஒரு வாக்கு மூலம் அம்மாவுக்கு துரோகமிழைத்த அதிமுக,பாஜகவின் கொள்கையற்ற கூட்டனியை முறியடிக்க அமமுக கூட்டனி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜாவித் இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





