தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக பாமகவின் ஜோதிமுத்து களம் காண்கிறார். இவரை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பாமகவின் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு கேட்டார். இதனால் அங்கிருந்த கட்சிக்காரர்களும், வேட்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் இதேபோல ஆப்பிள் சின்னத்திற்கு சீனிவாசன் வாக்கு கேட்டது குறிப்பிடத்தக்கது.