Monday, April 29, 2024

எச்சரிக்கை பதிவு : கலாச்சார சீர்கேட்டில் சிக்கப்போகும் அதிரை ?

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர்- பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த வாரம் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இத்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அழகாக காட்சி தருகிறது.

ஆனால் அதிரை ரயில் நிலையத்தை பார்வையிட இளம்பெண்களும், குமரிப்பெண்களும் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். ஆண்களின் துணையின்றி பெண்கள் கூட்டம் கூட்டமாக வருவது நிச்சயமாக சீரழிவையே உருவாக்கும்.

ஏதோ சுற்றுலா தலங்களுக்கு செல்வது போல் ரயில் நிலையத்திற்கு செல்லும் அதிரை இளம்பெண்கள், அங்கு புகைப்படம் போன்றவைகளை எடுக்கின்றனர். அவ்வாறு வரும் பெண்களை சமூக விரோதிகள் படம் பிடிக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் ?

ஒழுக்கத்திற்கு பெயர் போன நம் அதிராம்பட்டினத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படவேண்டியது. இதுகுறித்து ஆலிம்களும், ஜமாஅத்தினரும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் அதிரை ஆண்களும், உள்ளூரில் இருக்கும் ஆண்களும் இவ்விஷயத்தில் அலட்சியம் செய்யாமல் தங்கள் வீடுகளில் உள்ள பெண்கள் சுற்றிப்பார்க்க ரயில் நிலையம் செல்வதை தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மிகப்பெரிய கலாச்சார சீர்கேட்டிலிருந்து நம் இளம்பெண்களை பாதுகாக்க முடியும் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...