Sunday, February 1, 2026

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி , பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்-ரஹானே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. நன்றாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ரஹானேவும் தன் பங்கிற்கு 61 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ICC ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.


 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img