Sunday, September 14, 2025

தமிழக அரசின் தலைமைச் செயலராக சண்முகம் ஐஏஎஸ் பதவியேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அதிகாரிகள் பிரிவு உபாசார விழா நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகத்தை ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநர் மாளிகையோ ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ தலைமை செயலாளராக நியமிக்க தீவிரம்காட்டியது.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு காட்டியது. இதனால் புதிய தலைமை செயலாளர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

2010-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராகி உள்ளார்.

இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img