Sunday, September 14, 2025

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு மத்திய மண்டல ஐஜி பாராட்டு !

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில், போலீசார் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரையும் பிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மண்டல ஐஜி வரதராஜு தலைமையில் டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் முன்னிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்களை பிடித்த திருவாரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் பாரத நேரு, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியம், இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரம் காவலர் ரகுவரன் அடங்கிய காவலர் குழுவினருக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றுகளை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img