Friday, March 20, 2026

தமிழக குடிமகன்களிடம் மூன்றே நாளில் 455 கோடி அள்ளிய டாஸ்மாக் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டன. இதற்காக திங்கள்கிழமை வரை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் கடந்த 25-ஆம் தேதி ரூ 100 கோடிக்கும், அடுத்த நாள் சனிக்கிழமை ரூ 183 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை 172 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. இந்த 3 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் ரூ 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ 325 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு ரூ 130 கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளது. தீபாவளி பலகாரம் கூட இந்த அளவுக்கு விற்பனையாகி இருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img