Monday, December 1, 2025

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது என்சிபி-சிவசேனா அரசு !

spot_imgspot_imgspot_imgspot_img

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் 19வது முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உத்தவ் தாக்கரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் உத்தவ் தாக்கரேவை 169 எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜகவின் 105 எம்எல்ஏ-க்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உத்தவ் தாக்கரே அரசிற்கு எதிராக எந்த ஒரு எம்எல்ஏ-வும் வாக்களிக்கவில்லை. மேலும் 4 எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிகளோடு சேர்ந்து ஏற்கனவே உத்தவ் தாக்கரேவிற்கு 154 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...
spot_imgspot_imgspot_imgspot_img