Friday, April 26, 2024

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது என்சிபி-சிவசேனா அரசு !

Share post:

Date:

- Advertisement -

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் 19வது முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, உத்தவ் தாக்கரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் உத்தவ் தாக்கரேவை 169 எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜகவின் 105 எம்எல்ஏ-க்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உத்தவ் தாக்கரே அரசிற்கு எதிராக எந்த ஒரு எம்எல்ஏ-வும் வாக்களிக்கவில்லை. மேலும் 4 எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிகளோடு சேர்ந்து ஏற்கனவே உத்தவ் தாக்கரேவிற்கு 154 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...