அதிராம்பட்டினம் ஜாவியா ரோட்டில் இன்று மூன்றாவது நாளாக குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொப்புள்கொடி உறவினர்கள் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை முத்தம்மாள் தெரு கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமவாசிகள் அனைவரும் அதிரை தொடர் போராட்ட அரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தெரிவித்ததோடு, தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.