இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருவது கொரோனா வைரஸ் பற்றித்தான்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள தனியார் ஜூஸ் விற்பனை நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காக தக்காளி, மிளகு ,வெங்காயம், மல்லித்தழை வேப்பிலை ,மஞ்சள் தூள், மற்றும் பல்வேறு மூலிகைகளை மூலம் செய்யப்பட்ட சூப்பை பொதுமக்களுக்கு இன்று முதல் இலவசமாக வழங்கிவருகிறார்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடைக்கு சென்று மூலிகை சூப்பை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து இளைஞர் சிவா கூறும்போது கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிறது என்று மருத்துவர்கள் கூறும் நிலையில்.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்னுடைய சின்ன பங்களிப்பாக எதிர்ப்பு சக்திக்காக பொதுமக்களுக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக மூலிகை சூப்பை இலவசமாக வழங்கி வருகிறேன் என்று கூறினார்.