Saturday, September 13, 2025

செஞ்சி திமுக எம்எல்ஏ-விற்கு கொரோனா உறுதி !

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மிக மோசமானதாக இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,29,893 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 16,112 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமானாஷ் கோஷ் மரணமடைந்தார்.

தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

இதனால் அவர் சென்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறார். திமுகவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img