அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
SDPI கட்சியின் நகர செயலாளர் SM. சாகுல் ஹமீது, நகர பொருளாளர் NM. ஷேக் தாவூத் மற்றும் நகர இணைச் செயலாளர் C. அஹமது.MSC ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலிடம் மனுவை வழங்கினர்.