Tuesday, May 7, 2024

வேகமெடுக்கும் புரேவி! மணிக்கு 90KM வேகத்தில் காற்று வீசும்.

Share post:

Date:

- Advertisement -

வானிலை ஆய்வு மையம் தகவல்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் பாம்பனுக்கு 490 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. திருகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.

இந்த புயல் இன்று இரவு திருகோணமலையை அடையும், மறுநாள் மன்னார்வளைகுடா அருகே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, புயல் வலுவுடன் கன்னியாகுமரி-பாம்பன் இடையே வருகிற 4ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலில் படி, புரெவி புயல் நாளை நண்பகலில் பாம்பனுக்கு மிக அருகில் வரும் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் புரெவி புயல் பாம்பனை நெருங்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே புரெவி புயலின் எதிரொலியாக பாம்பனில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...