Saturday, September 13, 2025

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – ஏபிபி கருத்துக்கணிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிர்கட்சியாக உள்ள திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 154 முதல் 162 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 58 முதல் 66 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்ற தெரிந்து விடும்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சிக்களிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. 41 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணிக்கு 58-66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 28.6 சதவிகித வாக்குகளை மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 1முதல் 5 இடங்களில் வெல்லும் என்றும் ஏபிபி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதர கட்சிகள் 5-9 இடங்கள் வெல்லும் என்றும் மநீம 8.3 சதவிகித வாக்குகளையும், அமமுக 6.9 சதவிகித வாக்குகளை பெறும் என்றும் இதர கட்சிகள் 14.8 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img