தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சில தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்படலாம் என்ற தகவலையும் தலைமை தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார்.