Friday, March 20, 2026

234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். சில தொகுதிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்படலாம் என்ற தகவலையும் தலைமை தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img