கொரோனா பேரிடரில் மக்களே உணவுக்கு திண்டாடும் சூழல் இருந்து வருகிறது ஒருபக்கம் பொருளாதாரம், மறுபக்கம் பொருள்கள் கிடைக்காமை.
இந்த நிலையில் தெரு நாய்களின் நிலைமையோ படு மோசம் உணவுகள் கிடைக்காமல் அலைந்தோடும் நாய்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு.
இதற்கு உறுதுணையாக அதிராம்பட்டினம் CBD அமைப்பின் தன்னார்வலர்கள் இணைந்து நாய்களுக்கு நாள் தோறும் உணவு வழங்கி வருகிறார்கள்.
இதனால் உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு உயர்தர கம்பெனி உணவுகள் கிடைத்து வருவதால் வாலாட்டிக் கொண்டே வளம் வருகிறது என அலெக்ஸ் தெரிவிக்கிறார்.
சமூக ஆர்வலரும் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் உடைய நகர செயலாளரும் ஆகிய அலெக்சாண்டர் நாய்களுக்கு தெரு தெருவாக சென்று உணவு கொடுத்துக்கொண்டு வருகிறார். இதில் அதிரை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் நகர தலைவர் மாலிக் மற்றும் துணை தலைவர் ஆரிப் நகர செயலாளர் அலெக்ஸ்சாண்டர் பொருளார் ஹாஜா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.