Saturday, September 13, 2025

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவரா நீங்கள்? தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில் சேவைகள் கொரோனா காரணமாக குறைந்தன. கொரோனா தொற்று குறைந்த பின்னர் சிறப்பு ரயில்களாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கி உள்ளன. தற்போதைய நிலையில் சிறிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள், முன்பதிவு இல்லாத பல ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் சேவை கடந்த புதன்கிழமை (நவ.10) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையும் (நவ.10) தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்குப் பழநி சென்றடைகிறது. பழநியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடைகிறது. இந்த இரண்டு ரயில்கள் மட்டுமல்ல, கோவை மேட்டுப்பாளையம், தாம்பரம் சென்னை ரயில் என அனைத்து ரயில் சேவைகளும் பழையபடி தொடங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவுக்கு முந்தய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது தெற்கு ரயில்வே. அதன் எதிரொலியாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவு 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு பயணிகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.30க்குள் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img