தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடி கடும் கடுப்பிலும் வெறுப்பிலும் உள்ளனர். இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணம், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் மக்கள் நிச்சயம் தங்களை ஆதரித்து வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...





