Tuesday, December 16, 2025

அதிரையின் மத ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! -காங்கிரஸ் சாமி நாரயண சாமி

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் மர்ம விஷமிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் அதிரை நகர காங்கிரஸ் துணை தலைவர் சாமி நாரயண சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக வாழும் பெருமைக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டான ஊர் அதிராம்பட்டினம். இங்கு அதிகமான முஸ்லீம்களும் இந்துக்களும் இனக்கமாக வாழ்கின்றனர். முஸ்லீம்களுக்கு அதிகமான இந்துகள் நண்பர்களாக,தோழிகளாக, ஆசிரியர்களாக, இருக்கின்றனர். அதேபோல் இந்துக்களுக்கும் இவ்வாறான ஒற்றுமை மிகுந்த அதிரையில், சமீபத்தில் சில சஞ்சலங்கள் மற்றும் சலசலப்புக்கள் ஏற்படுத்திடலாம் என சில தீயசக்திகள் விசம செயல்களால் முகநூல், மற்றும் போஸ்டர் வாயிலாக முற்படுகிறார்கள். இவ்வூர் சமுகநல்லிணக்கத்திற்கு பேர்போன ஊர். எனவே இதனால் இங்கு எள்ளளவும் சலசலப்பை ஏற்படுத்த முடியாது, அவர்கள் எண்ணியது நடக்காது இனியும் அறவே நடக்காது. நம் அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை நமக்கான பலம். நமதூரின் மகத்துவம்” என தனது அறிக்கையில் சாமி நாரயண சாமி குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img