அதிரை நகர SDPI தலைவர் அஸ்லம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிரை மேலத்தெரு விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதை திமுக நிறுத்த வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொக்காலிகாடு ஊராட்சியில் உள்ள மேலத்தெரு விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்துவார். அதிரை மக்கள் எந்த ஊராட்சியில் வசித்தாலும் அவர்களின் நலனுக்காக அதிரை நகர SDPI தொடர்ந்து உழைக்கும். உள்ளாட்சி எல்லையை சுட்டிக்காட்டி பொறுப்புகளை தட்டிக்களிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கு மத்தியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக பணியில் களமாடுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலத்தெருவின் விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் வலியுறுத்துவோம்! -SDPI நகர தலைவர் அஸ்லம்
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





