31ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அதிரை நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வெறும் ஒரு டிராக்டர், ஒரு மினி லாரி மற்றும் 2 பேட்டரி மினி வாகனங்கள் மட்டுமே உள்ளன. வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து இந்த வாகனங்களே குப்பைகளை பெற்று குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனங்கள் வரும் வரை மணிக்கணக்கில் தள்ளுவடிகளிலேயே வைத்துக்கொண்டு தூய்மை பணியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு புதிய வாகனங்கள் வாங்கி தூய்மை பணியாளர்களின் நேரம் வீணடிக்கப்படுவதை தடுத்து அவர்களை பிற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கூட்ட அரங்கு கட்டுவதற்கு ஆர்வம் காட்டும் அதிரை நகராட்சி, இனியாவது எது முதல் தேவை என்பதை அறிந்து செயல்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





