Friday, May 3, 2024

Big Breaking: அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்குவதற்கான பணிகள் துவக்கம்! கிராம மக்களிடம் கருத்து கேட்கும் அதிகாரிகள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்திலேயே மிக பெரிய தாலுகாவாக இருக்கும் பட்டுக்கோட்டையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவில் சேர்ப்பதற்கு அட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை பட்டுக்கோட்டை வட்டாட்சியர், கோட்டாட்சியர் அல்லது தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்புக்கு பிறகு இறுதி முடிவுக்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். கடலோர மக்களின் கனவான அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் பட்சத்தில் கடலோர பகுதிகளுக்கு அரசின் திட்டங்கள் விரைவாக கிடைப்பதுடன் பேரிடர் கால மீட்பு பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...