Thursday, May 9, 2024

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான பெண்மணி ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக IMMK நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அந்த வயதான பெண்மணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக IMMK நிர்வாகிகள் அனுமதித்துள்ளனர். அந்த வயதான பெண்மணியை தர்காவில் இருந்து மீட்கும்பொழுது பணப்பையும் அந்த பையில் கொஞ்சம் பணமும் இருந்துள்ளது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த வயதான பெண்மணி உடல்நிலை சாதாரண நிலைக்கு வந்த உடன் அவர்களின் அந்த பணப்பையை ஒப்படைக்கலாம் என எண்ணி ஐமுமுக நிர்வாகிகள் அந்த பணப்பையை பாதுகாத்து வந்துள்ளனர். அந்த பெண்மணியோ எந்த தகவலும் இன்றி மருத்துவமனையில் இருந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த பணப்பை ஐமுமுக நிர்வாகிகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் வயதான பெண்மணி ஒருவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்த விட்டதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களின் மூலம் பரவியது. இறந்த பெண்மணிக்கு பதிலாக சமீபத்தில் ஐமுமுக நிர்வாகிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி புகைப்படம் பரவியத்தை அறிந்த நிர்வாகிகள் அந்த பெண்மணி குறித்து ஆராய துவங்கினர். இதனைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தில் உள்ள பெண்மணி உயிரோடு நலமாக உள்ளதாக மல்லிப்பட்டினம் பகுதியில் இப்ராஹிம் என்ற நபரிடம் இருந்து வந்த தகவலை தஞ்சை மாவட்ட CBD அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர் அலி உறுதி செய்தார். அதன் பின்னர் இந்த தகவலை ஐமுமுக நிர்வாகி அதிரை கனி அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில் அந்த வயதான பெண்மணியின் சத்திரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு ஐமுமுக நிர்வாகிகள் நேரில் சென்றி அந்த பணப்பையை ஒப்படைந்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...