Monday, February 2, 2026

அதிரையில் ஆதரவற்று,இறந்த இந்து சகோதரரின் உடலை அவர்கள் மத சம்பிரதாயப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர ஐமுமுக,அமைப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆரிஃப்,ஷாகுல் ஹமீது குழுவினர் பல்வேறு சமூக பணிகளில் செயலாற்றி வருகிறார்கள். அதன்படி இன்று உடல் நலிவுற்ற ஒரு இந்து சகோதரர் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டதாகவும் அவரின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றுஅடக்கம் செய்ய காவல்துறையினர் மேற்குறிப்பிட்ட சமூக ஆர்வலர்களின் உதவியை நாடியது,

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாரிமுத்துவின் உடலை மீட்டு இந்து மத சம்பிரதாயப்படி பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த கோபால் என்பவர் கூறுகையில் , இஸ்லாமியர்களின் இது போன்ற செயல்களினால் நாங்கள் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்றும் எங்கள் ஊரில் நாங்கள் அண்ணன் தம்பிகளாக பழகி கொள்வதை அரசியல் ஆதாயம் தேடும் சில கட்சிகள் விரும்புவதில்லை அவர்களை எல்லாம் நாங்கள் புரந்திள்ளிவிட்டு ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img