பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலம் என்பதால் அதிரையில் காலை, மாலை, இரவு என திருமணங்கள் நடைபெற்று வருகிறது. தொடர் விருந்து உபசரிப்புகளில் அட்டவணை போட்டு உறவுக்காரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழக்கத்திற்கு மாறாக நிக்காஹ் முடிவதற்கு முன்னரே நார்சாவை திருமணவீட்டார் விநியோகம் செய்தனர். பள்ளி வளாகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் வாசலில் நின்று வரவேற்று நார்சாவை குடும்பத்தினர் வழங்கினர். இதன் காரணமாக திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நார்சா கிடைத்ததுடன் நிக்காஹ் முடிந்த கையோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு அனைவரும் விரைவாக கலைந்து வீடு திரும்பினர். இந்த செயல்முறை காரணமாக பரபரப்புகள் ஏதுமின்றி அனைவருக்கும் நார்சா விநியோகம் செய்யப்பட்ட விதத்தை திருமணத்தில் பங்கேற்றோர் வெகுவாக பாராட்டினர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





