Wednesday, March 18, 2026

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் அதிரை அரசு கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்திருக்கும் அந்த மனுவில் “பொதுப்பணித்துறையில் டெண்டர் விடப்பட்டு பழைய கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடிபாடுகளை கொண்டு ECR ரோட்டிலிருந்து மருந்துகள் ஏற்றிவரும் வண்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக கால்நடைகள் கொண்டுவரும் வண்டிகள் அனைத்தும் மருந்தக கட்டிடம் வரை எளிதாக வரும் வகையில் பெரிய பாதை உயரமாக (ரோடு ) அமைத்து தர வேண்டுகிறேன். சுற்றுவட்டார மக்களின் செல்லப்பிராணிகளான பூனை, நாய் புறாக்கள் இதர பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் தற்காலத்திற்கு ஏற்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதுடன், தற்போதைய பொதுமக்களின் பிரச்சனையாக உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையினை வெகுவாக நாளடைவில் குறைக்கும் விதமாக நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் (ANIMAL BIRTH CONTROL -ABC -PROGRAM ) செயல்படுத்திட ஆவண செய்ய இதன்வழி கேட்டுக்கொள்கிறேன். என எஸ்.எச்.அஸ்லம் குறிப்பிட்டுள்ளார்.

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரிப்பதால் தெருநாய்கள் வெறிப்பிடித்து அதிரை வீதிகளில் விளையாடும் சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் குறிப்பாக கோழி உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கடித்து வரும் சூழலில் முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img